Friday 19 July 2013

தக்காளி -புதினா -கொத்தமல்லி சட்னி

தக்காளி, புதினா , கொத்தமல்லி இந்த மூன்றையும் சேர்த்து செய்யுற சட்னியை தான் இன்னைக்கு உங்களுடன்  ஷேர் பண்றேன் . இது தேங்காய் சேர்க்காமல் செய்யும் ஒரு வகை சட்னி . நீங்க இரண்டு நாட்கள் fridgeஇல் வைத்தும் இதை உபயோகிக்கலாம் .


தேவையான பொருட்கள் :
புதினா - 1 கப் 
கொத்தமல்லி இழை - 1 கப் 
தக்காளி - 3 சிறியது 
பொட்டுகடலை - 2 tbsp 
பச்சைமிளகாய் - 2-3 
உப்பு - தே .அளவு 
ஆயில் - 2 tsp 

தாளிக்க :

கடுகு - 1/2 tsp 
உ .பருப்பு - 1/2 tsp 
கருவேப்பிலை - 1 கொத்து 

செய்முறை :


  • ஒரு வானலியில் 1 tsp எண்ணெய்  ஊற்றி  அதில் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் பொட்டுகடலை சேர்த்து சிறிது பொன்னிறமாகும் வரை வதக்கவும் .



  •  இதனுடன் நறுக்கிய தக்காளி, தே.அளவு  உப்பு சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும் . 

  • இப்பொழுது  புதினா , கொத்தமல்லி இலைகளை சேர்த்து 5நிமிடம் நன்றாக வதக்கவும். 
கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸ்யில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
                                           

மற்றொரு  கடாயில் 1tsp  எண்ணெயை ஊற்றி கடுகு ,உ .பருப்பு, கருவேப்பிலை  சேர்த்து தாளிக்கவும் . இதில் அரைத்த விழுதை சேர்த்து 100ml தண்ணீர் சேர்த்து கரைக்கவும் .

இந்த கலவையை ஒரு கொதி வரும் வரை வெய்யுங்கள் , கலவை  சிறிது கெட்டியானதும் , நிறம் மாற ஆரம்பிக்கும்  இப்பொழுது இறக்கிவிடுங்கள் .
                                           

உப்பின் அளவை சரிபார்க்கவும் . ருசியான தக்காளி புதினா கொத்தமல்லி சட்னி ரெடி .


இதையும் பாருங்க நல்ல காம்பினேசன் ....
ஓட்ஸ் தோசை 

1 comment:

  1. நான் வெங்காயம், தேங்கா சேர்த்தும் பொட்டுக்கடலையை சேர்க்காமயும் செய்வேன்.

    ReplyDelete

Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....